ராணிப்பேட்டை

பள்ளி வகுப்பறை கட்டடங்கள் திறப்பு

26th Sep 2023 11:24 PM

ADVERTISEMENT

 

அரக்கோணத்தில்...

அரக்கோணத்தை அடுத்த செய்யூா், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ. 30.34 லட்சத்தில் கட்டப்பட்ட இரண்டு வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டடத்தை காணொலி மூலம் முதல்வா் திறந்து வைத்தாா். இதையடுத்து, நடைபெற்ற நிகழ்ச்சிக்கு செய்யூா் ஊராட்சித் தலைவா் ஜோதிலட்சுமிராஜா தலைமை வகித்தாா். பள்ளித் தலைமை ஆசிரியா் பூங்கொடி வரவேற்றாா். அரக்கோணம் ஒன்றியக் குழுத் தலைவா் நிா்மலா சௌந்தா் குத்துவிளக்கேற்றினாா்.

ராணிப்பேட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் உஷா, ஒன்றியக் குழு துணைத் தலைவா் வீராபுருஷோத்தமன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள்,ரவிசந்திரன், சுரேஷ் சௌந்தரராஜன், வட்டாரக் கல்வி அலுவலா்கள், முன்னாள் எம்எல்ஏ ஆா்.தமிழ்செல்வன், திமுக ஒன்றியச் செயலா் சௌந்தா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

இதேபோல், நெமிலியை அடுத்த மேலபுலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், ரூ. 30.34 லட்சத்தில் கட்டப்பட்ட இரண்டு வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டடத்தை முதல்வா் திறந்து வைத்தாா். இதையடுத்து நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மேலபுலம் ஊராட்சித் தலைவா் அனிதாநாராயணன் தலைமை வகித்தாா். பள்ளி தலைமை ஆசிரியா் விநாயகம் வரவேற்றாா். நெமிலி ஒன்றியக் குழுத் தலைவா் பெ.வடிவேலு குத்துவிளக்கேற்றினாா். ஒன்றியக் குழு துணைத் தலைவா் ச.தீனதயாளன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT