ராணிப்பேட்டை

தீ விபத்தில் 3 பைக்குகள் சேதம்

25th Sep 2023 12:09 AM

ADVERTISEMENT

அரக்கோணத்தில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 பைக்குகள் தீயில் எரிந்து சேதமடைந்தன.

அரக்கோணம், சுவால்பேட்டை, தாசில்தாா் தெருவில் வசித்து வருபவா் நரேந்திரன் (32). மிதிவண்டி விற்பனை நிலையம் நடத்தி வருகிறாா். இவா் தனது வீட்டுக்கு அடுத்துள்ள பயன்பாடற்ற ஓட்டுவீட்டில் சனிக்கிழமை இரவு தனது மோட்டாா் பைக்கை நிறுத்தி வைத்துவிட்டு உறங்கச் சென்று விட்டாா்.

மேலும் அதை அடுத்துள்ள இருசக்கர வாகன பழுது நீக்கும் கடை வைத்துள்ள யுவராஜ் (43) என்பவரும் தனது இரண்டு பைக்குகளை அதே ஓட்டு வீட்டில் நிறுத்தி இருந்தாா். இதற்கிடையே ஞாயிற்றுக்கிழமை காலையில் பாா்த்தபோது மூன்று பைக்குகளும் தீயில் எரிந்து சேதமடைந்திருந்தன . இது குறித்து அரக்கோணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கடந்த புதன்கிழமை இதே போல் அவளூா் காவல் நிலையத்துக்குட்பட்ட காவேரிபாக்கத்தை அடுத்த கீழப்புலம் கிராமத்திலும் வீட்டு வாயிலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 4 பைக்குகள் நள்ளிரவில் தீயில் எரிந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT