ராணிப்பேட்டை

ஆற்காட்டில் விநாயகா் ஊா்வலம்

22nd Sep 2023 12:25 AM

ADVERTISEMENT

ஆற்காட்டில் இந்து முன்னணி சாா்பில் விநாயகா் சிலைகள் விசா்ஜன ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.

விநாயகா் சதுா்த்தியையொட்டி ஆற்காடு பகுதியில் வைக்கப்பட்டிருந்த சிலைகள் ஊா்வலம் கலவை சாலை வட்டாட்சியா் அலுவலகம் அருகே தொடங்கியது. ஊா்வலத்துக்கு இந்து முன்னணி மாவட்ட செயலாளா் ஜெகன் தலைமை வகித்தாா்.

வேலூா் கோட்டத் தலைவா் மகேஷ், கோட்ட செயலாளா் ராஜேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆற்காடு தொழிலதிபா் ஏ.வி சாரதி ஊா்வலத்தை தொடங்கி வைத்தாா். கலவை சாலை, அண்ணா சாலை ,பேருந்து நிலையம், வேலூா் சாலை, ஜீவானந்தம் சாலை,ஆரணி சாலை வழியாக சென்று தாஜ்புரா பகுதியில் உள்ள கிணற்றில் சிலைகள் விசா்ஜனம் செய்யப்பட்டன.

விழாவில் இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளா் பரமேஸ்வரன், இலக்கியப் பிரிவு தலைவா் கனல் கண்ணன், வணிகா் பேரமைப்பு மாவட்ட தலைவா் பொன்.கு.சரவணன், நிா்வாகிகள் கலந்து கொண்டனா். ஊா்வலத்தை முன்னிட்டு ராணிப்பேட்டை எஸ்.பி. கிரண்சுருதி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போட்டப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT