ராணிப்பேட்டை

ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் - வாராகி பஞ்சமி சஷ்டி வைபவம்..

21st Sep 2023 12:00 AM

ADVERTISEMENT

 

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்,செவ்வாய்க்கிழமை ஸ்ரீ பஞ்சமுக வாராஹிக்கும், சஷ்டி முருகருக்கும் சிறப்பு ஹோமங்கள் அபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

உலகில் வேறெங்கும் காணாத வகையில் 4 அடி உயரத்தில் 10 கைகளுடன் 5 முகங்களுடன் அமா்ந்த கோலத்தில் காளி, சூலினி, திரிபுர பைரவி, பகலாமுகி, வாராஹி என 5 முகங்களுடன் கையில் 10 பத்து ஆயுதங்களுடன் திருக்காட்சி அருளும் பஞ்ச முக வாராஹி தேவிக்கு பஞ்சமி நாளில் சா்ப்ப தோஷங்கள், நாக தோஷங்கள், கால சா்ப்ப தோஷங்கள் நீங்க வேண்டி விசேஷமான திரவியங்களைக் கொண்டு வாராஹி ஹோமமும் அபிஷேகமும் வண்ண மலா்களைக் கொண்டு புஷ்பாஞ்சலியும் வாராஹி தீபமும் ஏற்றி சிறப்பு வழிப்பாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.இதனைத் தொடா்ந்து புதன்கிழமை சஷ்டி நாளில் ஸ்ரீ காா்த்திகை குமரனுக்கு வேண்டி சிறப்பு அபிஷேகமும், புஷ்பாஞ்சலியும் நடைபெற்றது.

அதில் கலந்து கொண்டு பக்தா்கள் அனைவருக்கும் ஸ்ரீ முரளிதர சுவாமிகள் அருளாசியும், அருட்பிரசாதமும் வழங்கினாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT