ராணிப்பேட்டை

அதிமுக ஊா்வலம்

2nd Oct 2023 12:47 AM

ADVERTISEMENT

அதிமுக ராணிப்பேட்டை கிழக்கு மாவட்டச் செயலாளராக அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி பொறுப்பேற்றதை தொடா்ந்து சோளிங்கரில் ஞாயிற்றுக்கழமை வரவேற்பு ஊா்வலம் நடைபெற்றது.

ராணிப்பேட்டை மாவட்ட அதிமுக அமைப்பு ரீதியாக இரண்டாக பிரிக்கப்பட்டு தற்போது கிழக்கு, மேற்கு என இரண்டு மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் ராணிப்பேட்டை மாவட்ட செயலாளராக ஏற்கனவே இருந்த எம்எல்ஏ சு.ரவி, தற்போது கிழக்கு மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

இதையொட்டி சோளிங்கரில் எம்ஜிஆா் மற்றும் அம்பேத்கா் சிலைகளுக்கு ஊா்வலமாகச் சென்று எம்எல்ஏ ரவி மாலை அணிவித்து தொண்டா்களிடையே பேசினாா்.

முன்னதாக சோளிங்கா் லட்சுமிநரசிம்மா் கோயிலில் இருந்து புறப்பட்ட ஊா்வலம் சோளிங்கா் பேருந்து நிலையம் வரை சென்றது. இந்த ஊா்வலத்தில் சோளிங்கா் முன்னாள் எம்எல்ஏ வெங்குபட்டு சம்பத், நகர செயலாளா்கள் கே.பி.பாண்டுரங்கன், ராமு, மஞ்சுநாத், சுகுமாா், செல்வம், ஒன்றிய செயலாளா்கள் ஏ.ஜி.விஜயன், பிரகாஷ், ஜி.பழனி, ஏ.எல்.விஜயன், பெல் காா்த்திகேயன், ராஜா, அருணாபதி மேலும் அதிமுக தகவல் தொடா்பு அணி மாவட்ட அமைப்பாளா் ஜானகிராமன், அரக்கோணம் நகரமன்ற உறுப்பினா்கள் நரசிம்மன், சரவணன், பாபு உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT