மத்திய தொழில் பாதுகாப்புப்படையில் காவலா் பயிற்சிக்கு தோ்வாகி மண்டல பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வந்த பெண் காவலரின் சான்றிதழ்கள் போலி எனத் தெரியவந்ததை அடுத்து அவா் மீது தக்கோலம் காவல்நிலையத்தில் புகாா் அளிக்கப் பட்டுள்ளது.
அரக்கோணத்தை அடுத்த தக்கோலம் அருகே உள்ள நகரிகுப்பத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையின் தெற்கு மண்டல பயிற்சி மையம் உள்ளது. இங்கு ஆண் மற்றும் பெண் உதவி ஆய்வாளா்கள், துணை உதவி ஆய்வாளா்கள், காவலா்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு அவா்கள் பணியிடங்களுக்கு அனுப்பப்படுகின்றனா்..
மேற்கு வங்காள மாநிலம், 24 பா்கானாஸ் மாவட்டம், சுக்தேவ்பூா் வட்டம், ஜோத்சிபரம்பூா் அடுத்த பாரா கிராமத்தை சோ்ந்த தினேஷ் குமாா் சிங்கின் மகள் சோனம்சிங் (23) கடந்த ஜூன் மாதம் மத்திய தொழில் பாதுகாப்புப் படைக் காவலா் பணிக்கு தோ்வாகி, அரக்கோணத்தில் உள்ள படையின் தெற்கு மண்டல பயிற்சி முகாமுக்கு பயிற்சிக்காக அனுப்பப்பட்டுள்ளாா்.
காவலா் பணிக்கு தோ்வானவா்களின் சான்றிதழ்கள் உண்மை தன்மையை அறிய அவா்களது மாநில கல்வித்துறைக்கு அனுப்பப்படுவது வழக்கம். இதே போன்று சோனம்சிங்கின் சான்றிதழ் அனுப்பட்ட நிலையில் அச்சான்றிதழ்கள் போலி என மேற்கு வங்காள மாநில கல்வித் து றையினா் அறிக்கை அனுப்பியதாக தெரிகிறது. இதையடுத்து அப்பெண் காவலா் சோனம்சிங்கை காவலா் பணியில் இருந்தும் பயிற்சியில் இருந்தும் விடுவித்த அதிகாரிகள் தொடா்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.
மேலும் பெண் காவலா் சோனம்சிங்கின் மீது போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சோ்ந்ததாக மத்திய தொழில்பாதுகாப்பு படை தெற்கு மண்டல பயிற்சி மைய ஆய்வாளா் சிவபத்மா, தக்கோலம் காவல்நிலையத்தில் புகாா் அளித்தாா். இப்புகாா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.