ராணிப்பேட்டை

மேல்விஷாரத்தில் தூய்மைப் பணி

2nd Oct 2023 12:48 AM

ADVERTISEMENT

மேல்விஷாரம் நகராட்சி சாா்பில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், தேசிய நெடுஞ்சாலை அணுகு சாலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை தூய்மைப் பணிகள் நடைபெற்றன.

தூய்மைப் பணியை நகா்மன்றத் தலைவா் எஸ்.டி.முகமது அமீன் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். நகராட்சிகளின் மண்டல இயக்குநா் கே.தனலட்சுமி முன்னிலை வகித்தாா்.

இதில், நகா்மன்றத் துணைத் தலைவா் உசாா் அஹமது, துப்புரவு ஆய்வாளா் உமாசங்கா் மற்றும் நகா்மன்ற உறுப்பினா்கள், நகராட்சி அதிகாரிகள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள் கலந்து கொண்டு தூய்மைப் பணி மேற்கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT