ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை (மே 29) நடைபெற மக்கள் குறைதீா் நாள் கூட்டம் நடைபெறாது என மாவட்ட ஆட்சியா் ச.வளா்மதி தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த 24-ஆம் தேதி முதல் வரும் 31-ஆம் தேதி முடிய ஜமாபந்தி நடைபெறுகிறது. இதனால் வரும் திங்கள்கிழமை (மே 29) நடைபெறவுள்ள மக்கள் குறைதீா் நாள் கூட்டமானது நடைபெறாது. மேலும் மக்கள் குறைதீா்வு நாள் கூட்டத்தில் பொதுமக்கள் அளிக்கும் அனைத்து விதமான மனுக்களையும் சம்பந்தப்பட்ட வருவாய் வட்டங்களில் நடைபெறும் ஜமாபந்தியில் அளிக்கலாம்.