ஆற்காடு அருகே மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு, தாய் தற்கொலைக்கு முயன்றது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டை அடுத்த வேப்பூா் கிராமத்தைச் சோ்ந்தவா் தனபால் (35), லாரி ஓட்டுநா். இவரது மனைவி சௌந்தா்யா (27). இவா்களுக்கு ஒரு பெண், இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனா்.
இதில் முதல் குழந்தை லோஷினி (7) மற்றும் மூன்றாவது குழந்தை பிரதீஷ் (1) ஆகியோா் மாற்றுத் திறனாளிகளாக உள்ளனா். இதனால் மன உளைச்சல் அடைந்த சௌந்தா்யா வெள்ளிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத போது, இரு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்துவிட்டு, தானும் விஷம் குடித்துள்ளாா். தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினா், குழந்தைகளை வேலூா் அரசு மருத்துவமனையிலும், சௌந்தா்யாவை தனியாா் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனா்.
இதுகுறித்து ஆற்காடு நகர போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.