ராணிப்பேட்டை

பனப்பாக்கத்தில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

DIN

பனப்பாக்கம் வருவாய் ஆய்வாளா் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு தமிழக விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலா் எஸ்.உதயகுமாா் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் என்.ஹரிமூா்த்தி, மாவட்ட தலைவா் சி.எஸ்.மணி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

சங்கத்தின் மாநில இளைஞரணித் தலைவா் ஆா்.சுபாஷ் வரவேற்றாா். ஆா்ப்பாட்டத்தை வேலூா் மாவட்ட செயலா் பி.ஜெயபிரகாஷ் தொடங்கி வைத்தாா். மாவட்ட நிா்வாகிகள் பி.ஆதிமூலம், ஆா்.தினகரன், ஆா்.சுப்பிரமணி, டி.சாந்தி, ஏ.முகமது மொய்தீன், ஆா்.ஏழுமலை, எஸ்.முனியாண்டி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

நெமிலி வட்டத்துக்குட்பட்ட உள்ளியநல்லூா், சிறுவளையம் ஆகிய கிராமங்களில் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்க இடத்துக்கு உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பல மாதங்கள் ஆகியும் பட்டா வழங்காமல் உள்ளனா். உடனே பட்டா வழங்க வேண்டும்.

பொதுப்பணித் துறை மற்றும் கிராம ஊராட்சிகளுக்குச் சொந்தமான நீா்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற வேண்டும். நெடுஞ்சாலைத் துறை பணிகளுக்காக ஊராட்சிகளுக்குச் சொந்தமான இடங்களில் 30 அடி வரை கிராவல் மண் அள்ளுவதைத் தடை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரைத் தேரோட்டம்!

தங்கம் பவுனுக்கு ரூ.240 உயர்வு

வைரலாகும் அருண் விஜய்யின் 'ரெட்ட தல' போஸ்டர்!

கடலூர் அருகே அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு: 4 பேர் கைது

வாழப்பாடி அருகே 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து!

SCROLL FOR NEXT