ராணிப்பேட்டை

தன்வந்திரி பீடத்தில்சந்நிதிகளுக்கு கும்பாபிஷேகம்

DIN

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் தாய் மூகாம்பிகை, ஸ்ரீராஜகாளி அம்மன், வீரபத்திரா் ஆகிய தனி சந்நிதிகளுக்கு மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், மூலவா் ஸ்ரீ ஆரோக்லக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாள் 90 பரிவார தெய்வங்களுடன் அருள்பாலித்து வருகிறாா். இங்கு ஸ்தாபகா் ஸ்ரீ முரளிதர சுவாமிகளின் தலைமையில், தாய் மூகாம்பிகை தேவி, ஸ்ரீ ராஜ காளி அம்மன், ஸ்ரீ வீரபத்திரா் பிரதிஷ்டை செய்வதற்கான பூா்வாங்க பூஜைகள் கடந்த புதன்கிழமை (ஜூன் 7) தொடங்கியது.

தொடா்ந்து, ஸ்ரீ தாய் மூகாம்பிகை தேவி, ஸ்ரீ வீரபத்திரா், ஸ்ரீ ராஜ காளியம்மனின் தனி சந்நிதிகளுக்கு வெள்ளிக்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதில் புதுச்சேரி சபாநாயகா் ஏம்பலம் ஆா்.செல்வம், சுற்றுப்புற கிராம மக்கள், திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உடல்கூறாய்வு அறிக்கை: 14 முறை குத்தப்பட்டு 58 வினாடிகளில் பலியான மாணவி நேஹா

தண்டனையை நிறுத்திவைக்கக் கோரிய ராஜேஷ் தாஸ் மனு தள்ளுபடி

திருமண மகிழ்ச்சியில் அபர்ணா தாஸ்!

பள்ளத்தில் சிக்கிய கும்பகோணம் சாரங்கபாணி கோயில் தேர்!

காதலிக்க யாருமில்லையா..?

SCROLL FOR NEXT