ஆற்காடு தோப்புகானா கங்காதர ஈஸ்வரா் வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு, திருகல்யாண உற்சவம் நடைபெற்றது.
ஆற்காடு அன்னபூரணி சமேத கங்காதர ஈஸ்வரா் வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவ விழா கடந்த 29-ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து நாள்தோறும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மகா தீபாராதனை, அலங்கரிக்கப்பட்ட உற்சவா் வாகன சேவைகள் நடைபெற்றன.
விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண உற்சவம் கோயில் திருப்பணிக் குழு தலைவா் கு.சரவணன் தலைமையில், வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
விழாவில் உபயதாரா்கள், பக்தா்கள் திரளானோா் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.