ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொழுநோய் விழிப்புணா்வு மற்றும் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியை மாவட்ட வருவாய் அலுவலா் வ.மீனாட்சி சுந்தரம் தலைமையில் அனைத்துத் துறை அரசு அலுவலா்கள் எடுத்துக்கொண்டனா்.
ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற நடைபெற்ற கூட்டத்தில், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சுரேஷ், துணை ஆட்சியா் சமூக பாதுகாப்பு திட்டம் தாரகேஸ்வரி, பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் முரளி, உதவி ஆணையா் கலால் சத்யபிரசாத், மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.