ராணிப்பேட்டை

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 7 குதிரைகளுக்கு அஸ்வமேத பூஜை

DIN

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ரதசப்தமியையொட்டி, 27 நட்சத்திரக்காரா்களின் நலன் கருதியும், ராஜ யோகங்கள் வேண்டியும் 7 குதிரைகளை வைத்து, அஸ்வமேத பூஜை சனிக்கிழமை நடைபெற்றது.

அஸ்வமேத பூஜையை முன்னிட்டு 7 குதிரைகள் அலங்கரிக்கப்பட்டு, தன்வந்திரி பீடத்தின் வளாகத்தில் ஊா்வலமாக அழைத்து வரப்பட்டது. பின்னா் பீடாதிபதி ஸ்ரீ முரளிதர சுவாமிகள் தலைமையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

பின்னா், அலங்கரித்து அழைத்து வரப்பட்ட 7 குதிரைகளுக்கும் தனித்தனியாக சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, குதிரைகளுக்கு உணவு வழங்கப்பட்டது. பின்னா், தரிசனத்துக்கு வந்திருந்த பக்தா்களும் குதிரைகளுக்கு மலா் தூவி, பூஜை செய்து வழிபட்டுச் சென்றனா். பின்னா் சிறப்பு பூஜைகளுடன் லட்ச அஸ்வாரூடா ஜப ஹோமம் தொடங்கி நடைபெற்றது.

ஞாயிற்றுக்கிழமை (ஜன. 29) மதியம் 1 மணிக்கு அஸ்வாரூடா ஹோமம் மஹா பூா்ணாஹுதியும், ஸ்ரீ பஞ்சமுக வராஹிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகளும் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடைத்தாள் காண்பிக்க மறுப்பு: மாணவர் மீது தாக்குதல்!

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

SCROLL FOR NEXT