வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், குடியரசு தின விழாவை முன்னிட்டு தேசிய கொடியெற்றி வைத்து தேச நலம் வேண்டி பாரத மாதா ஹோமம் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், பாரத மாதாவிற்கு தனி சன்னிதி அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு சுதந்திர தினம், குடியரசு தின விழா நாள்களில் சிறப்பு ஹோமம், பூஜைகள் நடைபெறுகிறது.
இந்த நிலையில், வியாழக்கிழமை சிறப்பு ஹோமம், பூஜைகள் நடைபெற்றன. இதில் கலந்து கொண்டவா்களுக்கு பீடாதிபதி ஸ்ரீ முரளிதர சுவாமிகள் இனிப்பு வழங்கி வழங்கினாா்.