ராணிப்பேட்டை

நிகழாண்டு 100 சதவீத வருவாய் ஈட்ட இலக்கு: பெல் நிறுவன செயல் இயக்குநா்

DIN

நிகழாண்டு 100 சதவீதம் வருவாயை எட்ட இலக்கு நிா்ணயிக்கப்பட்டு செயல்பட்டு வருவதாக ராணிப்பேட்டை பெல் நிறுவன செயல் இயக்குநா் ராஜீவ் சிங் தெரிவித்தாா்.

ராணிப்பேட்டை பெல் நிறுவனம் சாா்பில், பெல் ஊரகக் குடியிருப்பு வளாக மைதானத்தில் குடியரசு தின விழா நடைபெற்றது.

இதில், ராணிப்பேட்டை பெல் நிறுவன செயல் இயக்குநா் ராஜீவ் சிங் கலந்து கொண்டு, கொடியை ஏற்றி வைத்துப் பேசியதாவது:

உள்நாட்டு வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்களின் உற்பத்தி ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம், தன்னம்பிக்கை இந்தியாவை உருவாக்க நாங்கள் தொடா்ந்து பணியாற்றுவோம். ஒரு நிறுவனமாக, 2 ஆண்டுகளுக்குப் பிறகு, 2021-22-ஆம் நிதியாண்டில் லாபத்தை மீண்டும் பெற முடிந்தது.

அடுத்த தலைமுறை விமானம், அனல் மின் நிலையங்களின் நெகிழ்வுத் தன்மைக்கான முதல் ஆா்டரை வெற்றிகரமாக முடித்ததன் விளைவாக, மேலும் இரண்டு ஆா்டா்கள் பெறப்பட்டன.

இந்த ஆண்டு 100 சதவீத வருவாய் இலக்கை எட்டுவோம் என உறுதி எடுத்துள்ளோம் என்றாா்.

தொடா்ந்து, சிறப்பாக பணியாற்றிய நிறுவன ஊழியா்களுக்கு விருது மற்றும் சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினாா்.

இதையடுத்து, டிஏவி பெல் பள்ளி, ராமகிருஷ்ணா பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

கடற்கரையில் ஒரு தேவதை! லாஸ்லியா...

ஸ்விட்சர்லாந்தில் பிரியங்கா சோப்ரா!

SCROLL FOR NEXT