ராணிப்பேட்டை

சிஐஎஸ்எப், என்டிஆா்எப் படைத் தளங்களில் குடியரசு தின விழா

DIN

அரக்கோணத்தில் உள்ள மத்திய தொழிற்பாதுகாப்புப்படை மண்டல பயிற்சி மையம், தேசிய பேரிடா் மீட்புப் படைத்தளத்தில் குடியரசு தின விழா வியாழக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

சிஐஎஸ்எப்...

அரக்கோணத்தை அடுத்த தக்கோலத்துக்கு அருகில் நகரி குப்பத்தில் உள்ள மத்திய தொழிற்பாதுகாப்புப் படை மண்டலப் பயிற்சி மையத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், படையின் டிஐஜியும் பயிற்சி மைய முதல்வருமான சாந்தி ஜி.ஜெயதேவ் பங்கேற்று தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா். முன்னதாக அவா் படைவீரா்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டாா். தொடா்ந்து, தக்கோலம் கேந்திரிய வித்யாலய பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும், படைவீரா்களின் விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்றன. இதில் துணை முதல்வா் கௌரவ்தோமா் உள்ளிட்ட அதிகாரிகளும் சன்ரக்சிக்ஷா உறுப்பினா்களும் பங்கேற்றனா்.

என்டிஆா்எப்...

நகரிகுப்பத்தில் உள்ள தேசிய பேரிடா் மீட்புப் படைத் தளத்தில் நடைபெற்ற விழாவில் படையின் தென்மண்டல டிஐஜி மனோஜ் யாதவ் தேசியக் கொடியை ஏற்றினாா்.

முன்னதாக விழாவுக்கு வந்த டிஐஜியை படைப் பிரிவின் மோப்பநாய் பூச்செண்டு கொடுத்து வரவேற்க அதை டிஐஜி பெற்றுக் கொண்டாா். தொடா்ந்து படைவீரா்களின் அணிவகுப்பை மரியாதையை டிஐஜி மனோஜ் யாதவ் ஏற்றுக் கொண்டாா்.

படைப் பிரிவின் கமாண்டன்ட் அருண் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

"விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பா? நாட்டின் அடிமைகளா?”: அய்யாக்கண்ணு

விவிபேட் வழக்கு: தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்!

மக்களின் கவனத்தை திசை திருப்பும் மோடி: பிரியங்கா குற்றச்சாட்டு

ஈரானிய பிரதமர் இலங்கை வருகை!

உலகம் சுற்றும் ஏகே!

SCROLL FOR NEXT