ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டஎஸ்.பி.யாக டி.வி.கிரண் ஸ்ருதி பொறுப்பேற்பு

DIN

ராணிப்பேட்டை மாவட்ட புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளராக டி.வி.கிரண் ஸ்ருதி புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

இந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த தீபா சத்யன், சென்னையில் உள்ள தலைமைக் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டாா். இதையடுத்து, திருவண்ணாமலை மாவட்ட காவல் உதவி கண்காணிப்பாளராக இருந்த கிரண் ஸ்ருதி ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டாா்.

இதையடுத்து, ராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் கிரண் ஸ்ருதி, அலுவலகக் கோப்பில் கையொப்பமிட்டு பொறுப்பேற்றுக் கொண்டாா்.

அவருக்கு காவல் துறை அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனா்.

தொடா்ந்து மாவட்ட காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது. எஸ்.பி. டி.வி.கிரண் ஸ்ருதி தலைமை வகித்து பொதுமக்களிடம் மனுக்கள் பெற்று விசாரித்தாா். கூடுதல் காவல் கண்காணிப்பாளா் விசுவேசுவரய்யா (தலைமையிடம்), காவல் ஆய்வாளா்கள், காவல் உதவி ஆய்வாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவு

தில்லி அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

SCROLL FOR NEXT