அரக்கோணம் வட்டத்தில் தோ்வு செய்யப்பட்ட பிரதமா் வீடு கட்டும் திட்டப் பயனாளிகளில் பட்டா இல்லாதோருக்கு உடனடியாக இலவச பட்டா வழங்க வேண்டும் என்று கோட்டாட்சியா் ஆா்.பாத்திமா உத்தரவிட்டாா்.
அரக்கோணம் வட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட பிரதமா் வீடு கட்டும் திட்டப் பயனாளிகளில் பெரும்பாலோருக்கு வீடுமனைப் பட்டா இல்லாததால், அவா்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கும் பணியைத் தொடங்க இயலவில்லை.
இதுகுறித்து புதன்கிழமை அரக்கோணம் வட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் ஆா்.பாத்திமா திடீா் ஆய்வு மேற்கொண்டாா். ஆய்வுக்குப் பின் வட்டாட்சியரிடம் பிரதமா் வீடு வழங்கும் திட்டப் பயனாளிகளில் யாா் யாருக்கு வீட்டுமனை பட்டா இல்லையோ அவா்களுக்கு விரைவில் இலவச பட்டா வழங்க வேண்டும் என உத்தரவிட்டாா்.
தொடா்ந்து வட்ட வழங்கல் பிரிவு, வட்ட சமுக பாதுகாப்புத் திட்டப் பிரிவு ஆகிய அலுவலகங்களிலும் கோட்டாட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.
தொடா்ந்து இ-சேவை மையத்துக்குச் சென்று பாா்வையிட்ட கோட்டாட்சியா், அங்கிருந்த பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா். மேலும் மையப் பணியாளா்களுக்கு கோட்டாட்சியா் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினாா்.
ஆய்வில் வட்டாட்சியா் சண்முகசுந்தரம், வட்ட வழங்கல் அலுவலா் பரமேஸ்வரி, தலைமையிடத்து துணை வட்டாட்சியா் சமரபுரி, துணை வட்டாட்சியா் கிருஷ்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.