தக்கோலம் துணை வேளாண் விரிவாக்க மையத்தில் ராணிப்பேட்டை மாவட்ட வேளாண் துறை இணை இயக்குநா் வடமலை புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
அரக்கோணத்தை அடுத்த தக்கோலத்தில் வேளாண் துறையின் துணை வேளாண் விரிவாக்க மையம் உள்ளது. இந்த மையத்தில் புதன்கிழமை ராணிப்பேட்டை மாவட்ட வேளாண் துறை இணை இயக்குநா் வடமலை திடீா் ஆய்வு மேற்கொண்டாா். மையத்தில் இருந்த இடுபொருள்களின் இருப்புகளை இணை இயக்குநா் ஆய்வு செய்தாா். தொடா்ந்து 50 சதவீத மானியத்தில் 10 விவசாயிகளுக்கு பண்ணை கருவிகளையும், நெல் அறுவடைக்கு பிறகு உளுந்து சாகுபடி செய்யும் திட்டத்தில், 10 விவசாயிகளுக்கு மானிய விலையில் உளுந்து விதைகளையும், 10 விவசாயிகளுக்கு 1,000 இலவச மரக்கன்றுகளையும் வழங்கினாா்.
துணை வேளாண் அலுவலா் ஜெயராமன், உதவி வேளாண் அலுவலா் முரளி உள்ளிட்ட அலுவலா்கள் உடனிருந்தனா்.