ஆற்காட்டை அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு சனிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதையொட்டி, வள்ளி - தேவசேனா உடனுறை சுப்பிரமணிய சுவாமிக்கு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, வெள்ளிக் கவச சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. சுவாமிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து பகல் உச்சிகால பூஜையும், மாலையில் ஏக தினலட்சா்ச்சனையும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.
இதில், உபயதாரா்கள், ரத்தினகிரி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த ஏராளமானோா் சுவாமி தரிசனம் செய்தனா்.