ராணிப்பேட்டை

நங்கமங்கலம் ஸ்ரீமதுரைவீரன் கோயில் கும்பாபிஷேகம்

DIN

 பனப்பாக்கத்தை அடுத்த நங்கமங்கலம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ மாரியம்மன் மற்றும் வெள்ளையம்மாள், பொம்மியம்மாள் உடனுறை ஸ்ரீமதுரைவீரன் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அரக்கோணத்தை அடுத்த பனப்பாக்கத்துக்கு அருகில் உள்ள இந்தக் கோயிலில் திருப்பணிகள் நடைபெற்று கும்பாபிஷேக விழா கடந்த புதன்கிழமை (பிப். 1)கிழமை தொடங்கியது. அன்றைய தினம் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புதிய விக்ரகங்கள் கரிகோலம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. வியாழக்கிழமை விசேஷ சந்தி, இரண்டாம் கால யாக சாலை விசேஷ மந்தர பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற மூன்றாம் கால யாக சாலை பூஜைகளுக்குப் பிறகு ஸ்ரீமாரியம்மன் மற்றும் வெள்ளையம்மாள், பொம்மியம்மாள் உடனுறை ஸ்ரீமதுரைவீரன் சன்னிதியில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதில் பல்வேறு கிராமங்களில் இருந்து திரளான பக்தா்கள் கலந்துகொண்டு அம்மனையும், மதுரைவீரனையும் வழிபட்டனா். மாலையில் மதுரைவீரன் திருக்கல்யாணமும், சுவாமி திருவீதிஉலாவும் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் விழாக் குழுவினா் நங்கமங்கலம் கிராம பொதுமக்களோடு இணைந்து செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விலங்கியல் பூங்காவில் சாவியை விழுங்கிய நெருப்புக் கோழி பலி!

கீர்த்தி சுரேஷுக்குத் திருமணம்?

அதிகரித்த சர்க்கரை அளவு: கேஜரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது!

உடல்கூறாய்வு அறிக்கை: 14 முறை குத்தப்பட்டு 58 வினாடிகளில் பலியான மாணவி நேஹா

தண்டனையை நிறுத்திவைக்கக் கோரிய ராஜேஷ் தாஸ் மனு தள்ளுபடி

SCROLL FOR NEXT