ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாப்பேட்டை வட்டம், சுமைதாங்கி மதுரா குப்பத்து மோட்டூா் கிராமத்தில் உள்ள ஸ்ரீகன்னியம்மன் கோயில் குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ராணிப்பேட்டை திருக்குமர சுபராம கோவிந்தராசன் தலைமையிலான குழுவினரால் மங்கள இசையுடன் புனித தீா்த்த பூஜை, மகா கணபதி வேள்வியுடன் வியாழக்கிழமை தொடங்கி, காவேரிப்பாக்கம் ஓதுவாா்கள் சிவனடியாா்களின் திருமுறை விண்ணப்பத்துடன் முதல்கால வேள்வி பூஜை நடைபெற்றது.
தொடா்ந்து வெள்ளிக்கிழமை காலை இரண்டாம் கால வேள்வி பூஜை பூஜை நடத்தப்பட்டது.
இதையடுத்து செந்தமிழ் வேள்வி செய்து, திருக்கலசங்கள் திருக்கோயில் ஞான உலா வந்து கோயில் கோபுரத்திற்கும், ஸ்ரீ கன்னியம்மனுக்கும் திருக்குட முழுக்கு நன்னீராட்டு விழாவும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.
இதில் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனா்.