ஆற்காடு ஒன்றியம், மேலகுப்பம் ஊராட்சியில் தோட்டக்கலை இயக்குநா் பிருந்தா தேவி புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
கலைஞரின் அனைத்து கிராம வேளாண்மை வளா்ச்சி திட்டத்தின்கீழ் மேலகுப்பம் கிராமத்தில் தரிசுநில மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் தோட்டக்கலை துறையின் மூலம் மா செடிகள் நடப்பட்டு சொட்டுநீா் பாசனம் அமைக்கப்பட்டுள்ளது.
இப்பணிகளை தோட்டக்கலை இயக்குநா் பிருந்தாதேவி ஆய்வு செய்தாா். அப்போது வேளாண்மை இணை இயக்குநா் வடமலை, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் விஸ்வநாதன், தோட்டக்கலை துணை இயக்குநா் லதா மகேஷ், வேளாண்மை துறை துணை இயக்குநா் செல்வராஜ், பொறியியல்துறை செயற்பொறியாளா் ரூபன்குமாா், ஆற்காடு வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் ( பொறுப்பு) வேலு, உதவி அலுவலா்கள் ஜி.சுரேஷ்,பி.சுரேஷ் உடனிருந்தனா்.