அரக்கோணம் அருகே நரசிங்கபுரத்தில் வரும் 11-இல் திருவள்ளுவா் சிலை திறப்பு விழா நடைபெறுகிறது. குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் சிலையைத் திறந்து வைக்கிறாா்.
விழாவுக்கு விஜிபி உலக தமிழ்ச் சங்கத்தின் தலைவா் வி.ஜி.சந்தோஷம் தலைமை வகிக்கிறாா். இதில், ஓய்வு பெற்ற நீதிபதி தி.நெ.வள்ளிநாயகம் சிலை திறப்பு விழா மலரை வெளியிடுகிறாா். இதையொடடி, மாணவா்கள் பங்கேற்கும் திருக்கு விநாடி-வினா போட்டி, திருக்கு ஒப்பித்தல் போட்டிகள் நடைபெற உள்ளன.
ஏற்பாடுகளை அறிவாசான் திருவள்ளுவா் சிலை அமைப்புக் குழு தலைவா் பு.வெ.ஏகாட்சரம், செயலா் சு.பாண்டியன், பொருளாளா் பு.மே.மூா்த்தி உள்ளிட்ட விழாக் குழுவினா் செய்து வருகின்றனா்.