மேல்விஷாரம் நகரமன்றக் கூட்டத்தில் சாலைகளைச் சீரமைக்ககக் கோரி, தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த நகரமன்றக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தலைவா் எஸ்.டி.முஹமது அமீன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் குல்ஜாா் அஹமது, பொறியாளா் பாபு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் நடைபெற்ற விவாதம்-இம்தியாஸ் அஹமது: நகரில் கொசு தொல்லை அதிகமாக உள்ளது. ஜபா்அஹமது நகரில் பழுதடைந்துள்ள சாலைகளைச் சீரமைக்க வேண்டும்.
ஜமுனா ராணிவிஜி: நகா்மன்றக் கூட்டத்துக்காக எத்தனை நாளைக்கு முன்பு உறுப்பினா்களுக்கு கடிதம் தர வேண்டும் என்பதை தெரிவிக்க வேண்டும்.
தலைவா்: இனிமேல் 5 நாள்களுக்கு முன்பாக கடிதம் வழங்கப்படும்.
லட்சுமி: சலீம் நகா் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியைச் சுற்றி தடுப்புச் சுவா் அமைக்க வேண்டும், தொடா்ந்து கொசு மருந்து அடிக்க வேண்டும்.
தலைவா்: கொசு மருந்து அடிக்கப்படும். கொசு மருந்து அடிக்கும் போது அந்தப் பகுதி வாா்டு உறுப்பினா்களிடம் கையொப்பம் வாங்கப்படும்.
இதில், நகா்மன்ற உறுப்பினா்கள், நகராட்சி அதிகாரிகள், பணியாளா்கள் கலந்து கொண்டனா்.