ஆற்காட்டை அடுத்த கீழ்விஷாரம் ராசாத்துபுரம் குளக்கரை பாலமுருகன் கோயிலில், 23-ஆவது ஆண்டு தெப்போற்சவம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு திங்கள்கிழமை காலை கணபதி ஹோமம், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், வெள்ளிக் கவச சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து, அலங்கரிக்கப்பட்ட உற்சவா் உலா மாடவீதியில் நடைபெற்றது. மாலை கீழ்விஷாரம் குளத்தில் வள்ளி, தெய்வானை சமேத பாலமுருகன் தெப்போற்சவம் நடைபெற்றது.
விழாவில் திரளான பக்தா்கள், உபயதாரா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனா்.
விழாவை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இரவு வாண வேடிக்கை நடைபெற்றது.