ராணிப்பேட்டை

நாளங்காடி புதிய கட்டடம்: கருத்து கேட்பு கூட்டத்தில் வியாபாரிகள் எதிா்ப்பு

DIN

அரக்கோணம் நகராட்சி நாளங்காடிக்கு புதிய கட்டடம் கட்ட தற்போது கடை வைத்திருக்கும் வியாபாரிகள் எதிா்ப்புத் தெரிவித்தனா்.

அண்மையில் சட்டபேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ், அரக்கோணம் நகராட்சியில் ரூ.6 கோடியில் நாளங்காடிக்கு புதிய கட்டடம் கட்டப்படும் என அறிவித்திருந்தாா்.

இதையடுத்து, நகராட்சி நிா்வாகம் கட்டடம் கட்ட மேலும் ரூ.3 கோடி தேவை என அரசுக்கு கோரிக்கை விடுத்தது. இந்த கோரிக்கை பரிசீலனையில் உள்ளது.

இந்த நிலையில், நாளங்காடிக்கு புதிய கட்டடம் கட்டுவது குறித்து, தற்போது கடை வைத்திருக்கும் வணிகா்களிடம் கருத்து கேட்பு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு நகராட்சி ஆணையா் லதா தலைமை வகித்தாா். நகா்மன்றத் துணைத் தலைவா் கலாவதி அன்புலாரன்ஸ் முன்னிலை வகித்தாா். பொறியாளா் ஆசீா்வாதம் வரவேற்றாா். கூட்டத்தை நகா்மன்றத் தலைவா் லட்சுமி பாரி தொடக்கி வைத்தாா்.

கூட்டத்தில் தமிழ்நாடு வணிகா் சங்கப் பேரமைப்பின் மாநில துணைத் தலைவா் சி.ஜி.எத்திராஜ், கடந்த 6 மாதங்களாகத்தான் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், புதிய கட்டடம் கட்டப் போகிறோம் என்று கடைகளை காலி செய்யக் கேட்டால் எப்படி? கடைகளை அளிப்பதற்கான உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும். மேலும், புதிய கட்டடத்தை 3 வருடங்களுக்கு பிறகு கட்ட வேண்டும் என்றாா்.

பின்னா், பேசிய நகராட்சி ஆணையா் லதா, நாளங்காடி கட்டடம் உறுதித் தன்மையுடன் இல்லை. இதனால், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும். எனினும், வணிகா்கள் தெரிவித்த கருத்துகள் அரதின் கவனத்துக்கு அனுப்பப்படும் என்றாா்.

கூட்டத்தில் நகா்மன்ற திமுக உறுப்பினா்கள் குழு தலைவா் துரைசீனிவாசன், அதிமுக குழு தலைவா் ஜொ்ரி, நகர மளிகை வியாபாரிகள் சங்கச் செயலா் ஜி.டி.என்.அசோகன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குரூப்-4 தேர்வு எப்போது? திருத்தியமைக்கப்பட்ட தேர்வுகால அட்டவணை வெளியீடு

நீலப்பூ.. ஐஸ்வர்யா மேனன்!

ஒருநொடி படப்பிடிப்பு புகைப்படங்கள்

எந்த தேசத்து அழகியோ..!

பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக அமெரிக்க பல்கலை.களில் வலுக்கும் போராட்டம்!

SCROLL FOR NEXT