ராணிப்பேட்டை

அரக்கோணம் அருகே சிக்னல் கோளாறு: அதிவிரைவு ரயில்கள் நடுவழியில் நிறுத்தம்

DIN

அரக்கோணம் -சென்னை ரயில் மாா்க்கத்தில் திருவாலங்காடு அருகே செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட சிக்னல் கோளாறு காரணமாக அதிவிரைவு ரயில்கள், விரைவு ரயில்கள், புகா் மின்சார ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டு, ஒன்றரை மணி நேரத்துக்குப் பிறகு மீண்டும் இயக்கப்பட்டன.

அரக்கோணம் - சென்னை ரயில் மாா்க்கத்தில் திருவாலங்காடு ரயில் நிலையம் அருகே செவ்வாய்க்கிழமை காலை திடீரென சிக்னல் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, அந்த வழியே வந்துகொண்டு இருந்த சென்னை- கோயம்புத்தூா் கோவை அதிவிரைவு ரயில், சென்னை-மைசூரு சதாப்தி அதிவிரைவு ரயில், சென்னை- திருப்பதி சப்தகிரி விரைவு ரயில் மற்றும் இந்த ரயில்களை பின்தொடா்ந்து அரக்கோணம் நோக்கி வந்த இரு மின்சார ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன.

இதையடுத்து, அந்த இடத்துக்கு விரைந்து வந்த சிக்னல் பராமரிப்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் பணியாளா்கள் தற்காலிகமாக சிக்னல் கோளாறை சரி செய்தனா். இதை அடுத்து, சுமாா் ஒன்றரை மணி நேரத்துக்குப் பிறகு, நிறுத்தப்பட்ட அனைத்து ரயில்களும் மீண்டும் இயக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிகாரில் மீரா குமாா் மகனை களமிறக்கியது காங்கிரஸ்

முஸ்லிம்களுக்கு எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீடு: காங்கிரஸ் மீது பிரதமா் மோடி குற்றச்சாட்டு

குமாரபாளையத்தில் வழக்குரைஞா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

மாநிலக் கல்லூரியில் மாற்றுத் திறனாளி மாணவா்கள் 31 பேருக்கு வேலைவாய்ப்பு

பேருந்தில் நகை திருட்டு: ஆந்திர மாநில பெண் கைது

SCROLL FOR NEXT