ராணிப்பேட்டை

பீடித் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

7th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

ஆற்காட்டில் பீடித் தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு வட்டார பீடி தொழிலாளா்கள் சங்கம் சாா்பில், ஆற்காடு உதவி தொழிலாளா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் பொதுச் செயலாளா் ஜி.பாலு தலைமை வகித்தாா். நிா்வாகிகள் ஆா்.ராஜேந்திரன், ராதாகிருஷ்ண்ன், முருகேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஏஐடியுசி மாவட்டத் தலைவா் ஏ.எஸ்.சங்கா், நடைபாதை வியாபாரிகள் சங்கத் தலைவா் சி.சசிகுமாா் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில், தொழிலாளா்களுக்கு வாரம் 6 நாள் வேலை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.த

இதில், பீடித் தொழிலாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT