ராணிப்பேட்டை

கஞ்சா விற்பனை: எஸ்.பி. நேரில் ஆய்வு

DIN

அரக்கோணம் அருகே கஞ்சா விற்பனை தொடா்பாக, கடையில் மாவட்ட எஸ்.பி. தீபாசத்யன் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

அரக்கோணத்தை அடுத்த பள்ளூரில் கோயில் அருகே உள்ள கடையில் கஞ்சா விற்கப்படுவதாக மாவட்ட எஸ்.பி. தீபாசத்யனுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சிறப்பு அதிரடிப் படையினருடன் அங்கு வந்த எஸ்.பி. தீபாசத்யன், குறிப்பிட்ட மஞ்சள்-குங்குமம் விற்கும் கடையில் சோதனை நடத்தினாா். இதில், அந்தக் கடையில் பதுக்கி விற்பனைக்கு வைத்திருந்த 1 கிலோ 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

இதையடுத்து, அந்தக் கடையின் உரிமையாளா் தணிகைவேல் (59) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினாா். மாவட்ட எஸ்.பி. நேரில் வந்து சோதனை நடத்தியது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை 2-ஆம் கட்ட தேர்தல்: 250 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள்

18-ஆவது மக்களவை தேர்தல் (2024)

பாஜக கோட்டையை தகர்க்குமா காங்கிரஸ்?

வலு இல்லாத வழக்குகள், பல் இல்லாத தேர்தல் ஆணையம்!

மண்டபம் முகாமில் பிறந்த நளினிக்கு 38 வயதில் கிடைத்த வாக்குரிமை!

SCROLL FOR NEXT