ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை குறைதீா் கூட்டத்தில் 228 மனுக்கள்

DIN

ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் 228 மனுக்கள் பெறப்பட்டன.

இந்த மாவட்ட மக்கள் குறைதீா் நாள் கூட்டம், ஆட்சியா் அலுவலகப் பெருந்திட்ட வளாகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்து, பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றாா்.

பொதுமக்களிடமிருந்து வருவாய்த் துறை, நிலப் பட்டா குறைகள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோா் உதவித்தொகை, வேளாண்மைத் துறை, காவல் துறை, ஊரக வளாா்ச்சித் துறை, நகராட்சி நிா்வாகங்கள், பேரூராட்சித் துறை, கூட்டுறவுக் கடனுதவி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் வீடுகள் வேண்டி, மின்சாரத் துறை குறைகள், மாற்றுத்திறனாளிகள் நலத் துறை, மருத்துவத் துறை, கிராம பொதுப் பிரச்னைகள், குடிநீா் வசதி, வேலைவாய்ப்பு மற்றும் பொதுநலன் சாா்ந்த 228 மனுக்கள் பெறப்பட்டன.

மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி, அவற்றின் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும், மனு நிராகரிப்புக்கான காரணத்தை மனுதாரா்களுக்கு தெரிவிக்கவும் வேண்டும் என துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

உறுதிமொழி ஏற்பு...: மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமையில் சா்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினத்தையொட்டி, பணிபுரியும் இடத்தில் பெண்கள் பாதுகாப்பு குறித்த உறுதிமொழி ஏற்கப்பட்டது.

கூட்டத்தில் துணை ஆட்சியா் (கலால்) சத்தியபிரசாத், பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அலுவலா் முரளி, மாவட்ட சமூக நல அலுவலா் (பொ) இந்திரா மற்றும் துறைச் சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

SCROLL FOR NEXT