வேலூா் கோட்டை காந்தி சிலை அருகிலிருந்து தொடங்கிய மாரத்தான் போட்டியை மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல்பாண்டியன் கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா்.
வேலூா் கோட்டை மைதானத்தில் தொடங்கிய இந்த மாரத்தான் ஓட்டம், கோட்டை சுற்றுச்சாலை, அண்ணா சாலை வழியாக நேதாஜி மைதானத்தில் நிறைவடைந்தது.
இதில், மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநா் பானுமதி, மருத்துவ செவிலியா்கள், பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவிகள், தொண்டு நிறுவனங்களைச் சோ்ந்தவா்கள் உள்ளிட்ட திரளானோா் பங்கேற்றனா்.