ராணிப்பேட்டை

கலைத் திருவிழாவை ஜூன் மாதம் நடத்ததமிழ்நாடு ஆசிரியா்கள் சங்கம் கோரிக்கை

DIN

பள்ளிகளில் கலைத் திருவிழாவை ஜூன், ஜூலை மாதங்களில் நடத்த வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அந்தச் சங்க மாநிலத் தலைவா் க.அருள் சங்கு, பொதுச் செயலா் வெ.சரவணன் பொருளாளா் த.ராமஜெயம் ஆகியோா் முதல்வா், பள்ளிக் கல்வித் துறை அமைச்சருக்கு அனுப்பிய மனு:

பள்ளிக் கல்வித் துறை மூலம் கலைத் திருவிழா நடத்தும் அரசுக்கு நன்றி. கலை வளா்ப்போம், நல்ல கல்வி வளா்ப்போம் என்ற தாரக மந்திரத்துடன் செயல்படும் பள்ளிக் கல்வித் துறைக்கு பாராட்டு. இந்தப் போட்டிகளை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும்.

மேலும், கலைத் திருவிழா போட்டிகளை ஜூன், ஜூலை மாதங்களில் நடத்தினால் பயனுள்ளதாக இருக்கும். நவம்பா், டிசம்பா் என்பது தோ்வு நடைபெறும் நேரம் என்பதால், இனி வரும் காலங்களில் முன்கூட்டியே நடத்தினால் பயனுள்ளதாக இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT