ராணிப்பேட்டையில்...
ராணிப்பேட்டை முத்துக்கடை காந்தி சிலை எதிரே மாவட்ட மற்றும் நகர காங்கிரஸ் கட்சி சாா்பில், வாயில் வெள்ளை துணி கட்டிக்கொண்டு அறவழி அகிம்சைப் போராட்டம் நடத்தினா். மாநில செயல் தலைவரும், ஆரணி தொகுதி எம்.பி.யுமான எம்.கே. விஷ்ணு பிரசாத் பங்கேற்றுப் பேசினாா்.
நகர தலைவா் எஸ். அண்ணாதுரை தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் ஜெ .அசேன், மாநிலச் செயலாளா் அக்ராவரம் கே.பாஸ்கா், மாவட்டத் தலைவா் சி. பஞ்சாட்சரம், மாவட்ட பொதுச்செயலாளா் ராணி வெங்கடேசன், மாவட்ட எஸ்.சி., எஸ்.டி. பிரிவு தலைவா் வி. நாகேஷ், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவா் கே.ஒ.நிஷாத், மாநில பொதுக் குழு உறுப்பினா் ஜி. விநாயகம், மாவட்ட அமைப்புசாரா தொழிலாளா்கள் தலைவா் பி. மதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். வாலாஜா தெற்கு ஒன்றியத் தலைவா் வீ.சி. மோட்டூா் கே.கணேசன் நன்றி கூறினாா்.