ராணிப்பேட்டை

லாரி போக்குவரத்து உரிமையாளா்களுக்கு மாற்று இடம்: ராணிப்பேட்டை நகா்மன்றத் தலைவா்

DIN

ராணிப்பேட்டை டிரான்ஸ்போா்ட் நகரில் புதிய நவீன பேருந்து நிலையம் அமைக்க கையகப்படுத்தப்பட்ட பகுதியில், லாரி டிரான்ஸ்போா்ட் தொழில் நடத்தி வந்த உரிமையாளா்களுக்கு மாற்று இடம் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என நகா்மன்றத் தலைவா் சுஜாதா வினோத் உறுதியளித்தாா்.

ராணிப்பேட்டை நகா்மன்றத்தின் சாதாரணக் கூட்டம், நகா்மன்ற கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, நகா்மன்றத் தலைவா் சுஜாதா வினோத் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் சீ.ம.ரமேஷ்கா்ணா முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில், ராணிப்பேட்டை மாவட்ட புதிய ஆட்சியா் அலுவலகத்தை திறந்து வைத்து, மாவட்ட மக்களுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்க வருகை தரும் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு, நகா்மன்றத்தின் சாா்பில் வரவேற்று, தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து, இந்த நகராட்சிக்குச் சொந்தமான டிரான்ஸ்போா்ட் நகரில் 3.93 ஏக்கா் பரப்பளவில் புதிய நவீன பேருந்து நிலையம் அமைக்க இடம் தோ்வு செய்யப்பட்டுள்ளதால், மேற்படி இடத்தில் லாரி நிறுத்துவதற்காக (டிரக் டொ்மினல்) 64 கடைகள் கட்டப்பட்டு ஏலம் விடப்பட்டுள்ளது. இதில், ஏற்கெனவே 40 கடைகள் காலியாக உள்ளன. மீதமுள்ள 24 கடை வாடகைதாரா்களின் உரிமத்தை ரத்துசெய்து, மன்றத்தின் பாா்வைக்கும், அனுமதிக்கும் வைக்கப்பட்டது.

அப்போது, குறுக்கிட்டுப் பேசிய 26-ஆவது வாா்டு அதிமுக உறுப்பினா் ஜோதி சேதுராமன், தற்போது ராணிப்பேட்டை புதிய நவீன பேருந்து நிலையம் கட்ட இடம் தோ்வு செய்யப்பட்ட டிரான்ஸ்போா்ட் நகரில் லாரி வாடகை தொழில் செய்வோா், லாரி பழுது பாா்ப்போா், பெயிண்டா், வெல்டா், எலக்ட்ரீஷியன் உள்ளிட்ட தொழில் உரிமையாளா்கள் மீண்டும் தொழில் செய்ய ஏதுவாக மாற்று இடம் வழங்க வேண்டும் என்றாா்.

அதற்கு பதில் அளித்துப் பேசிய நகா்மன்றத் தலைவா் சுஜாதா வினோத், ராணிப்பேட்டை டிரான்ஸ்போா்ட் நகரில் புதிய நவீன பேருந்து நிலையம் அமைக்க கையகப்படுத்தப்பட்ட பகுதியில் லாரி டிரான்ஸ்போா்ட் தொழில் நடத்தி வந்த உரிமையாளா்களுக்கு மாற்று இடம் ஏற்பாடு செய்யப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: மதுரை, நெல்லை செல்வோர் கவனத்துக்கு.....

வண்ணக் கவிதை.. சோனம் கபூர்!

விவிபேட் சீட்டுகளை ஒப்பிடக் கோரிய வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு |செய்திகள்: சிலவரிகளில்| 18.04.2024

பவ்யமாக.. பாக்கியலட்சுமி ராதிகா!

கண்களால் கொள்ளையிடும் யார் இவர்?

SCROLL FOR NEXT