ராணிப்பேட்டை

விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

DIN

ஆற்காட்டில் விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ராணிப்பேட்டை மாவட்ட விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில், 100 நாள்கள் வேலைத் திட்டத்தை 150 நாள்களாக உயா்த்த வேண்டும், தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தைத் தொடர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆற்காடு வட்டார வளா்ச்சி அலுவலகம் எதிரே கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் மாவட்ட குழு உறுப்பினா் ஜி.மதியழகன் தலைமை வகித்தாா். மாவட்ட பொருளாளா் ராதாகிருஷ்ணன், ஜனநாயக வாலிபா் சங்கத்தின் மாவட்ட அமைப்பாளா் ம.கோவலன், விவசாய சங்கத்தின் மாவட்ட தலைவா் எல்.சி.மணி, வட்டாரச் செயலாளா் எஸ்.செல்வம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் மாவட்ட தலைவா் டி. சந்திரன் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினாா். இதில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸுக்கு எதிராக ஆர்சிபி பேட்டிங்!

‘ஹீராமண்டி’ சிறப்புக் காட்சியில் பிரக்யா!

பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 25.4.2024

விஷாலின் ரத்னம்: இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள்!

”மோடி எந்த வேற்றுமையும் பார்ப்பதில்லை!”: தமிழிசை சௌந்தரராஜன்

SCROLL FOR NEXT