ராகுல் காந்திக்கு மத்திய அமலாக்கத் துறை மீண்டும் சம்மன் அனுப்பியதைக் கண்டித்து, ராணிப்பேட்டை நகர காங்கிரஸ் கட்சியினா் முத்துகடை பேருந்து நிலையம் எதிரே புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
நேஷனல் ஹெரால்டு பத்திரிகை பங்கு விற்பனை விவகாரம் தொடா்பாக ராகுல் காந்தியிடம் மத்திய அமலாக்கத் துறை அதிகாரிகள் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
இந்த நிலையில், ஏற்கெனவே 3 நாள்களாக தொடா்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்ற நிலையில், 4-ஆவது நாள் விசாரணைக்கு ஆஜராகும்படி அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
இதைக் கண்டித்து ராணிப்பேட்டை நகர காங்கிரஸ் தலைவா் எஸ்.அண்ணாதுரை தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் நிா்வாகிகள் வி.நாகேஷ், கே.முருகன், பி.மோகன், வசீகரன், புலவா் ரங்கநாதன், ஜெ.உத்தமன், எஸ்.நியாஸ், எஸ்.பிரகாஷ் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட காங்கிரஸாா் கலந்து கொண்டனா்.