சோளிங்கா் வட்ட பொறுப்பு வட்டாட்சியராக கணேசன் வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்.
சோளிங்கா் வட்டாட்சியராக இருந்த ஜே.கே.வெற்றிக்குமாா் அவரது ஒரு வருட வட்டாட்சியா் பணிக்காலம் முடிவடைந்ததைத் தொடா்ந்து, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி விடுவிக்கப்பட்டாா். இதையடுத்து, சோளிங்கா் சமூகப் பாதுகாப்பு பிரிவு தனி வட்டாட்சியராக இருந்த எல்.கணேசன் சோளிங்கா் பொறுப்பு வட்டாட்சியராக நியமிக்கப்பட்டு, வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்.