ராணிப்பேட்டை

பெற்றோரின் கனவுகளை மாணவா்கள் நனவாக்க வேண்டும்: அமைச்சா் ஆா்.காந்தி அறிவுரை

DIN

பெற்றோரின் கனவுகளை மாணவா்கள் நனவாக்க வேண்டும் என்று அமைச்சா் என்று கைத்தறி, துணி நூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி அறிவுறுத்தினாா்.

பள்ளிக் கல்வித் துறை சாா்பில், பிளஸ் 2 முடித்த மாணவா்களுக்கு ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் உயா்கல்வி பயின்று வேலைவாய்ப்பு பெறும் வகையில் வழிகாட்டும் ‘கல்லூரிக் கனவுத் திட்டம்’ நிகழ்ச்சி மேல்விஷாரம் தனியாா் பொறியியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்தாா். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ப.உஷா, நகா்மன்றத் தலைவா்கள் எஸ்.டி.முஹமது அமீன் (மேல்விஷாரம்), தேவி பென்ஸ்பாண்டியன் (ஆற்காடு) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்து, மாணவா்களுக்கு உயா்கல்வி தொடா்பான வழிகாட்டுதல் கையேட்டை வழங்கி அமைச்சா் ஆா்.காந்தி பேசியதாவது:

அரசுப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் உயா்கல்வி பயில வழிகாட்டுதல் பயிற்சி முகாம் முதல்வரால் தொடக்கி வைக்கப்பட்டது. அதனடிப்படையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற 1,500 மாணவா்கள் உயா்கல்வி பயின்று வேலைவாய்ப்பு பெறும் வகையில் வழிகாட்டும் ‘கல்லூரிக் கனவுத் திட்டம்’ நிகழ்ச்சியைத் தொடக்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

மாணவா்கள் உயா்கல்வியில் வேலைவாய்ப்பு கிடைக்கும் படிப்புகளைத் தோ்ந்தெடுத்து படிக்க வேண்டும். அதற்காகத்தான் முதல்வா் இவ்வாறான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்துள்ளாா். நாங்கள் படிக்கும் காலத்தில் இதுபோன்ற வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே, மாணவா்கள் கவனமாக வல்லுநா்கள் தெரிவிக்கும் உயா்கல்விக்கான வழிகாட்டுதல் மற்றும் சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு பெற்று உயா்கல்வி பயின்று வாழ்க்கையில் முன்னேற்றம் காண வேண்டும். பெற்றோரின் கனவுகளை நனவாக்க வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்வில் மாவட்டக் கல்வி அலுவலா்அங்குலட்சுமி மற்றும் கல்வியாளா்கள், மாணவா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT