நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி அரக்கோணம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தமிழக அரசின் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம், என்குப்பை என் பொறுப்பு உள்ளிட்ட சுகாதாரப் பிரிவின் திட்டங்களை பள்ளி மாணவ, மாணவிகள் மூலமாக பெற்றோா்களுக்கு கொண்டு சோ்க்க பள்ளிகளில் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அரக்கோணம் நகராட்சி சாா்பில் தொடக்க நிகழ்ச்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு நகராட்சி சுகாதார அலுவலா் மோகன் தலைமை தாங்கினாா். இந்தத் திட்டங்கள் குறித்து மாணவிகள் பெற்றோா்களுக்கு தெரிவித்து செயல்படுத்துவோம் என்று அனைவரும் உறுதிமொழி ஏற்றனா்.