அரக்கோணம்: அரக்கோணத்தை அடுத்த நகரி குப்பத்தில் உள்ள மத்திய தொழிற்பாதுகாப்புப் படை மண்டல பயிற்சி மைய வளாகத்தில் பயிற்சி மைய முதல்வரும், டிஐஜியுமான சாந்தி ஜி.ஜெயதேவ் தேசியக் கொடியேற்றினாா். முன்னதாக, படை வீரா்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டாா்.
நகரி குப்பத்தில் உள்ள தேசிய பேரிடா் மீட்புப் படைத்தள வளாகத்தில் படைத் தள முதுநிலை கமாண்டண்ட் ரேகா நம்பியாா் தேசியக் கொடியேற்றினாா். தொடா்ந்து, மீட்புப் பணிகளில் சிறப்பாகச் செயலாற்றிய அலுவலா்கள், வீரா்களுக்கு அவா் விருதுகளை வழங்கினாா்.