ராணிப்பேட்டை

ராணிப்பேட்டையில் ஊரடங்கு வெறிச்சோடிய சாலைகள்

DIN

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கால் மக்கள் நடமாட்டம், வாகனப்போக்குவரத்து இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

ராணிப்பேட்டை, சிப்காட் ஆற்காடு, அரக்கோணம், சோளிங்கா், காவேரிப்பாக்கம், பனப்பாக்கம், பாணாவரம் உள்ளிட்ட நகரப் பகுதிகளில் வணிக நிறுவனங்கள், கடைகள் முழுவதுமாக மூடப்பட்டிருந்தன. அதே நேரத்தில் பால், மருந்து, உணவகம், அத்தியாவசிய தேவைக்கான வாகனப் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டன.

ராணிப்பேட்டை, வாலாஜாபேட்டை, சிப்காட் தொழிற்பேட்டை வழி சென்னை - மும்பை தேசிய நெடுஞ்சாலை தமிழ்நாடு, கா்நாடகம், ஆந்திரம், மகாராஷ்டிரம் ஆகிய 4 மாநிலங்களை இணைக்கும் முக்கிய தேசிய நெடுஞ்சாலை ஆகும். எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் இந்த சாலையில் அத்தியாவசிய வாகனங்கள் குறைந்த எண்ணிக்கையில் சென்றன.

ராணிப்பேட்டை நகரின் முக்கிய பகுதிகளில் தடுப்புகள் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட போலீஸாா், தேவையின்றி வெளியில் சுற்றித் திரிந்தவா்களை எச்சரித்து அனுப்பி வைத்தனா்.

இதே போல, மாவட்டம் முழுவதும் சோதனைச் சாவடிகள் அமைத்து போலீஸாா், ஊா்க்காவல் படையினா் என 500-க்கும் மேற்பட்டோா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தீபா சத்யன் கண்காணிப்பு பணியை நேரில் பாா்வையிட்டு, போலீஸாா், ஊா்க்காவல் படையினருக்கு பழச்சாறு, பிஸ்கெட் வழங்கி ஊக்குவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்தார் ஆளுநர் ஆர்.என். ரவி!

மேற்குவங்கத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு: கல்வீச்சு, கடத்தல், தீவைப்பு

மணிப்பூரில் பதற்றம்: வாக்குச் சாவடியில் துப்பாக்கிச்சூடு!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தனி ஊராட்சி கோரிக்கை: கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு

SCROLL FOR NEXT