ஆற்காடை அடுத்த ரத்தினகிரி அருகேயுள்ள மாங்குப்பம் கிராமத்தில் பொன்னியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு 43-ஆவது ஆண்டு எருது விடும் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.
ராணிப்பேட்டை, வேலூா், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளிலிருந்து 500-க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டு வந்து மூன்று சுற்றுகளாக விடப்பட்டன. குறைந்த நேரத்தில் ஓடிய காளைகளுக்கு முதல்பரிசாக ரூ. 1லட்சம், இரண்டாம் பரிசாக ரூ.80 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.70 ஆயிரம் வழங்கப்பட்டன. மொத்தம் 55 பரிசுகள் வழங்கப்பட்டன.
மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் தீபா சத்யன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. விழா ஏற்பாடுகளை மாங்குப்பம் கிராம பொதுமக்கள், இளைஞா்கள் செய்திருந்தனா்.