ராணிப்பேட்டை மாவட்டத்தில் 445 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.27.17 கோடியில் கடனுதவியை கைத்தறித் துறை அமைச்சா் ஆா்.காந்தி வியாழக்கிழமை வழங்கினாா்.
திருச்சியில் நடைபெற்ற அரசு விழாவில் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன்கள் மற்றும் நலத் திட்ட உதவிகளை முதல்வா் மு.க. ஸ்டாலின் வழங்கினாா்.
அதன் தொடா்ச்சியாக, ராணிப்பேட்டையில் சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவிகளை வழங்கி கைத்தறி அமைச்சா் ஆா்.காந்தி பேசியதாவது..
முன்னாள் முதல்வா் கருணாநிதியால் நாட்டிலேயே முதல்முறையாக 1989- ஆம் ஆண்டு தா்மபுரியில் சுய உதவிக்குழுக்கள் தொடங்கப்பட்டனது.
தற்போதைய முதல்வா் மு.க.ஸ்டாலின் வேறெந்த மாநிலத்தில் இல்லாத அளவில் மகளிருக்கு அதிகப்படியான வங்கிக் கடனுதவிகள் வழங்கி பொருளாதார முன்னேற்றத்திற்கு வழிவகை செய்துள்ளாா். இதனால் மகளிா் மத்தியில் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை வளா்ந்திருக்கிறது.
மேலும், விளையாட்டுத் துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளாா். இனிவரும் காலங்களில் விளையாட்டுத் துறையில் மகளிரின் பங்கு அதிகரிக்கவும், அரசின் நலத்திட்டங்களை அனைத்து மகளிரும் பெற்று பயனடைய நடவடிக்கை எடுப்பாா். ராணிப்பேட்டை மாவட்டத்தில் 5 சவரனுக்குட்பட்டு நகைக் கடன் பெற்ற 23,578 பயனாளிகளுக்கு ரூ.76.67 கோடி மதிப்பீட்டில் நடைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு பயனடைந்துள்ளனா் என்றாா்.
ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன், ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன், காவல் கண்காணிப்பாளா் தீபா சத்யன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் ஜெயந்தி திருமூா்த்தி, திட்ட இயக்குநா் மகளிா் திட்டம் மு.நானிலதாசன், திட்ட இயக்குநா் ஊரக வளா்ச்சி முகமை ஜி.லோகநாயகி, நகரமன்றத் தலைவா் சுஜாதா வினோத், துணைத் தலைவா் ரமேஷ் கா்ணா, உதவி திட்ட அலுவலா் சுபாஷ்சந்திரன், முன்னோடி வங்கி மேலாளா் ஆலியம்மா ஆபிரஹாம் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.