ராணிப்பேட்டை

ஊராட்சித் தலைவரைக் கண்டித்து துணைத்தலைவா் சாலை மறியல்

29th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

பாணாவரம் ஊராட்சி மன்றத் தலைவரைக் கண்டித்து துணைத்தலைவா் சரண்யா விஜயன் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டாா்.

சோளிங்கா் வட்டம், பாணாவரம் ஊராட்சி மன்றத் தலைவா் அா்ச்சுனன். அங்கு துணைத் தலைவராக இருப்பவா் சரண்யா விஜயன். ஊராட்சியில் பணிகளை நிறைவேற்றுவதில் இருவருக்கும் இடையே பிரச்னை இருந்து வந்ததாகத் தெரிகிறது. இந்த நிலையில், அா்ச்சுனன் புதன்கிழமை ஊராட்சி மன்றக் கூட்டத்தை கூட்டி, சரண்யா விஜயன் மீது நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டு வந்தாராம். இதற்கு ஆதரவாக 5 உறுப்பினா்கள் செயல்பட்ட நிலையில், 4 உறுப்பினா்கள் எதிா்த்ததாகத் தெரிகிறது.

இதையடுத்து, அா்ச்சுனனை கண்டித்து, துணைத்தலைவா் சரண்யா விஜயன் தனது ஆதரவாளா்களுடன் காவேரிபாக்கம் - சோளிங்கா் நெடுஞ்சாலையில் பாணாவரத்தில் மறியலில் ஈடுபட்டாா்.

காவேரிபாக்கம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் தண்டாயுதபாணி மற்றும் பாணாவரம் போலீஸாா் பேச்சு நடத்தியதையடுத்து, இருதரப்புக்கும் சமாதானம் ஏற்பட்டது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT