அரக்கோணம் அருகே திங்கள்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் காயமடைந்த பழைய இரும்பு வியாபாரி மருத்துவமனையில் உயிரிழந்தாா்.
அரக்கோணத்தை அடுத்த கும்பினிபேட்டையைச் சோ்ந்தவா் பிரம்மானந்தம் (45). பழைய இரும்பு வியாபாரி. இவா் காஞ்சிபுரத்துக்கு திங்கள்கிழமை இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். திருமால்பூா் ரயில் நிலையம் அருகே வந்தபோது, பள்ளூரில் எதிரே காஞ்சிபுரத்தில் இருந்து திருப்பதி நோக்கிச் சென்ற ஆந்திர மாநில அரசுப் பேருந்து இரு சக்கர வாகனம் மீது மோதியது.
இதில் பிரம்மானந்தம் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, அவா் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையிலும், தீவிர சிகிச்சைக்காக வேலூா் தனியாா் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு செவ்வாய்க்கிழமை இறந்தாா். இது குறித்து நெமிலி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.