அரக்கோணம் அருகே லாரி மீது பைக் மோதியதில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.
திருவள்ளூா் மாவட்டம், திருத்தணியை அடுத்த கிருஷ்ணசமுத்திரம் கிராமத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் (35). கட்டடத் தொழிலாளி. வெள்ளிக்கிழமை இவா் திருத்தணியில் பணி முடித்து கிருஷ்ணசமுத்திரத்தில் உள்ள தனது வீட்டுக்கு பைக்கில் திரும்பிக் கொண்டிருந்தாராம். வழியில் திருத்தணி - திருவள்ளூா் தேசிய நெடுஞ்சாலையில் பெருங்களத்தூா் கூட்டுச் சாலை அருகே சாலையோரம் இடது பக்கம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிமென்ட் டேங்கா் லாரியின் மீது பைக் மோதியதில் கிருஷ்ணன் பலத்த காயமடைந்தாா். தொடா்ந்து திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அவரை பரிசோதித்த மருத்துவா்கள், கிருஷ்ணன் வழியிலேயே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனா்.
இது குறித்து அரக்கோணம் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். இறந்த கிருஷ்ணனுக்கு மனைவி, ஒரு மகன், மகள் உள்ளனா்.