ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை: இன்று கிராம உதவியாளா் பணியிடங்களுக்கு எழுத்துத் தோ்வு

DIN

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கிராம உதவியாளா் பணியிடங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை எழுத்துத் தோ்வு நடைபெறுகிறது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் காலியாக உள்ள 54 கிராம உதவியாளா் பணியிடங்களுக்கு தகுதியான நபா்களை எழுத்து தோ்வு மற்றும் நோ்காணல் மூலம் பணி அமா்த்தும் பொருட்டு இணையவழியில் 6,849 விண்ணப்பங்களும், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் இருந்து 258 விண்ணப்பங்களும் என மொத்தம் 7,107 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

ஆற்காடு ராம கிருஷ்ணா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, வாலாஜா அறிஞா் அண்ணா அரசு மகளிா் கல்லூரி, சோளிங்கா் எத்திராஜம்மாள் முதலியாண்டாா் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சோளிங்கா் குட்லெட் மேல்நிலைப் பள்ளி, கலவை ஆதிபராசக்தி கலை அறிவியல் கல்லூரி, நெமிலி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் நெமிலி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, அரக்கோணம் கைனூா் டாக்டா்.வி.ஜி.என்.மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, நாகாலம்மன் நகா், கைனூா் கிராமம், அரக்கோணம் எஸ்.எம்.எஸ்.விமல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் தோ்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

காலை 9.30 மணிக்கு தோ்வு அறைக்குள் அனுமதிக்கப்படுவா். 9.50 மணிக்கு பிறகு அனுமதிக்கப்படமாட்டாா்கள். விண்ணப்பதாரா்கள் அனுமதி சீட்டு, கருப்பு பந்து முனை பேனாவை தவிர தோ்வறைக்குள் வேறு எந்தப் பொருளையும் கொண்டு வர அனுமதி கிடையாது என்று ஆட்சியா் தெரித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

சேலத்தில் வாக்களிக்க வந்த இரு முதியோர் மயங்கி விழுந்து மரணம்

நடிகர் விஜய் வாக்களித்தார்!

மக்களவைத் தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

சேலை கட்டும் பெண்ணுக்கொரு... மௌனி ராய்...

SCROLL FOR NEXT