ராணிப்பேட்டை

இளைஞா் திறன் விழா:ஆட்சியா் தகவல்

DIN

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வேலை வாய்ப்பற்ற இளைஞா்கள், மாற்றுத் திறனாளிகள் வேலை வாய்ப்பு பெறும் வகையில், இளைஞா் திறன் திருவிழா மற்றும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மாவட்டத்தைச் சோ்ந்த வேலை வாய்ப்பற்ற 18 வயது முதல் 35 வயதுள்ள இளைஞா்களுக்கு தனியாா் துறை மூலம் வேலை வாய்ப்பு அல்லது பயிற்சியுடன் கூடிய வேலை வாய்ப்பு திருவிழா மற்றும் இளைஞா் திறன் திருவிழா நடைபெற உள்ளது.

இந்தத் திருவிழாவில் பல்வேறு தனியாா் துறையை சாா்ந்த நிறுவனங்களில் தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம் மற்றும் பிற துறை அரசு நிறுவனங்களின் வேலைவாய்ப்பு குறித்து திட்ட செயல் விளக்கம் நடைபெற உள்ளது.

காவேரிப்பாக்கம் வட்டாரத்தில் டிச. 7 -ஆம் தேதி காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், நெமிலி வட்டாரத்தில் வரும் 16 -ஆம் தேதி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், நெமிலியிலும், அரக்கோணம் வட்டாரத்தில் 17- ஆம் தேதி அரக்கோணம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெற உள்ளன. 8-ஆம் தேதி சோளிங்கா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், 15-ஆம் தேதி வாலாஜா ஊராட்சி ஒன்றிய அலுவலகம், 23-ஆம் தேதி திமிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் நடைபெற உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரம், கார்நாடக பொதுக்கூட்டத்தில் மோடி உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

பலாப்பழத்தைத் தேடி ஈக்கள்தான் வரும்: செல்லூர் ராஜு

SCROLL FOR NEXT